எல்.ஐ.சி பிரீமியத்திற்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கப்படவுள்ளது. லிகாய் 21 வது அமைப்பு தினத்தில் ராணிப்பேட்டை எல்ஐசி அலுவலகம் முன்பு இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் சங்கத்தின் தலைவர் ரத்தனம் ஜெயக்குமார், சங்கத்தின் மாநிலச் செயலாளர் தா. வெங்கடேசன், பி. ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.