விழுப்புரம், பிப்.22- சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று புதைத்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விழுப்புரம் மாவட்டம், திரு வெண்ணெய்நல்லூர் வட்டம், கொண்டசமுத்திரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (41). இவர் கடந்த 30.7.2016 கரும்பு தோட்டத்திற்கு வந்த 12 வயது சிறுமியை தாக்கி பாலி யல் வன்கொடுமை செய்தார். பின்னர் சிறுமியை கல்லால் அடித்துக் கொலை செய்து, உடலை அதே இடத்தில் பள்ளம் தோண்டி புதைத்தார். இதுகுறித்து சிறுமி யின் பெற்றோர், திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு கூறப் பட்டது. அதில் நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை சிறையில் இருந்து தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், மேலும் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி யின் குடும்பத்திற்கு இழப்பீடாக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சேகர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.