புதுச்சேரி, நவ.25- தொலைத்தொடர்பு சேவையில் அதானி நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு குற்றம் சாட்டினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் புதுச்சேரி 11வது மாவட்ட மாநாடு திங்களன்று (நவ.25) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சந்திர சேகரன் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மேம்பாடும், சேவைகளும் மற்றும் எதிர்கால கடமைகளும் என்ற தலைப்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு உரையாற்றினார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கடந்த நான்கு மாதத்தில் 8.5 லட்சம் புதிய சந்தாதாரர்கள் புதிதாக இணைந்துள்ளனர். நிறுவனத்தின் சேவையை கருத்தில் கொண்டு, தனியார் நிறுவனங்களின் அநியாய கட்டண உயர்வால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களாக மாறி யுள்ளனர். வரலாற்றுப் போராட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாது காக்க ஊழியர் சங்கம் எடுத்த முயற்சியின் காரண மாக அதிகாரிகளும், ஒருங்கி ணைந்து நாடு தழுவிய அள வில் போராட்டம் நடத்தியது வரலாற்று நிகழ்வாகும். அதன் பிறகுதான், 4 ஜி அலைக்கற்றை ஒன்றிய பாஜக அரசு வழங்கி இருக்கிறது, 2020 ஆம் ஆண்டு 4 ஜி அலைக்கற்றை வழங்கி இருந்தால், இந்நிறுவனத்தின் சேவையும், வருமானம் பல மடங்கு உயர்ந்திருக்கும். மேற்கத்திய நாடுகளில் தகுதி உள்ள நிறுவனங்களில் இருந்து கருவிகளை வாங்க வேண்டும் என்று வலியுறுத்திய போது, அதற்கு பாஜக அரசு தடைப்போட்டது. பிஎஸ்என்எல் நிறு வனத்தை முடமாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படு கிறது. ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டும் என்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரம் உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறது. அதற்கு நேர்மாறாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தை எப்படி யாவது தனியார் மயமாக்க வேண்டும் என்றும் ஒன்றிய பாஜக அரசு துடியாய் துடித்துக் கொண்டு வருகிறது. அதானி குழுமத்திற்கு தாரை வாக்க தற்போது, தொலைத் தொடர்பு சேவையில் தொழில் துவங்குவதற்கு அதானி குழுமத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் பிஎஸ்என்எல் நிறு வனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் என்ற அச்சம் ஊழியர்க ளுக்கு மத்தியில் எழுந்துள்ளது. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க தொடர்ந்து பொதுத் துறை நிறுவனமாக செயல்பட ஒன்றுபட்ட இயக்கம் நம்மிடம் தேவை. இவ்வாறு அவர் பேசினார். ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் கலைச்செல்வி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். முன்னதாக மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழ் மாநிலச் செயலாளர் ராஜு மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.