சென்னை, மே 27 - ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் பாலிசி பத்திரங்களை வழங்க வேண்டுமென்று அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) வலியுறுத்தி உள்ளது. லிகாய் அமைப்பின் சென்னை முதல் கோட்டத்தின் 3ஆவது மாநாடு வெள்ளியன்று (மே 27) குரோம்பேட்டையில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், தமிழ கத்தில் உள்ள பாலிசிதாரர்களுக்கு ஆங்கில மொழியில் பாலிசி பத்தி ரங்கள் வழங்கப்பட்டு வந்தன. கடந்த மார்ச் மாதம் முதல் இந்தி மொழியில் பாலிசி பத்திரங்கள் வழங்கப்படுகிறது. இந்தி மொழியை நீக்கிவிட்டு, ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் பாலிசி பத்திரங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. எல்ஐசி பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும், அனைத்து முகவர்க ளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், குழுக் காப்பீடு வசதியை முகவர் பணி யில் இருக்கும் வரை நீட்டிக்க வேண்டும்; இதற்கான தொகையை 50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பணிக்கொடை கணக்கிடும் முறையை மாற்றி அமைப்பதோடு, அந்த தொகையை 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பாலிசிதாரர்களுக்கு அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான சேவை வழங்கும் அனுகு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு தலைவர் எம். ராஜேந்திரன் தலைமை தாங்கி னார். தலைமை நிலையச் செயலா ளர் ஆர்.முருகேசன் வரவேற் றார். துணைத் தலைவர் கே.எஸ்.சங்கரநாராயணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலப் பொருளாளர் கே.தாமோதரன் பேசினார். கோட்டச் செயலாளர் கோவி.கோபால் வேலை அறிக்கையும், பொருளாளர் கே.சுகுமார் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்த னர். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார், நிர்வாகி கோபி நாதன், சென்னை காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சென்னைபகுதி 1இன் தலைவர் ஜி.nஜயராமன், பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், லிகாய் சென்னை கோட்டம் 2இன் செயலாளர் டி.கே. வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். லிகாய் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஏ.கலாம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
நிர்வாகிகள்
கோட்டத் தலைவராக எம்.ராஜேந்திரன், செயலாளராக கே.தாமோதரன், பொருளாளராக கே.சுகுமார் தேர்வு செய்யப்பட்டனர்.