சென்னை, ஆக. 31 - மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டுமென்று எல்ஐசி ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்ஐசி பென்சன்தாரர்கள் சங்கத்தன் 19 ஆவது ஆண்டு மாநாடு சனிக்கிழமையன்று (ஆக.31) சர்மானி ஓட்டலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், காப்பீட்டுத் துறையில் 100 விழுக்காடு அந்நிய மூலதனத்தை அனு மதிக்க கூடாது, பொது இன்சூரன்ஸ் குடும்ப ஓய்வூதியர்களுக்கு சீரான 30 விழுக்காடு உயர்வு வழங்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், ஆயுள் மற்றும் மருத்துவ காப் பீட்டிற்கான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும், 1986க்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் உட்பட அனைத்து ஓய்வூதியர்களுக்கு கருணைத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கம்யூடேஷன் தொகையை மாற்றி அமைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் சி.நரசிம்மராவ் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.ரகுராமன் வரவேற்றார். இணைச் செயலாளர் ஜி.ஜெய்சங்கர் அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.சாம்ப சிவம் தீர்மானங்களை முன்மொழிந்தார். அகில இந்திய நீர்வழிப் போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டி.நரேந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்தார். சங்கத்தின் செயலாளர் எஸ்.சந்தானம் வேலை அறிக்கையும், பொருளாளர் வி.ராமானுஜம் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சென்னை காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ் குமார், பகுதி-2ன் இணைச் செயலாளர் கிரண்குமார் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். உதவி பொருளாளர் ஆர்.பக்த வச்சலம் நன்றி கூறினார். நிர்வாகிகள் சங்கத்தின் தலைவராக சி.நரசிம்மராவ், செயலாளராக எஸ்.சந்தானம், பொருளாள ராக வி.ராமானுஜம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.