districts

img

பழங்குடி மக்களுக்கு எல்ஐசி ஊழியர்கள் வெள்ள நிவாரணம்

திருவண்ணாமலை, டிச.21- திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு எல்ஐசி ஊழியர்கள் நிவாரணப்பொருட்களை வழங்கினர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த நீப்பத்துறை, ராயண்டபுரம் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.  நீப்பத்துறை, இராயண்டபுரம், மேலப்புஞ்சை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்களின் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள அந்த மக்களுக்கும் அவர்களது குழந்தை களுக்கும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில்  டிச.21 சனிக்கிழமை யன்று நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.  நீப்பத்துறையில் நடைபெற்ற நிகழ்வில், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் துணைத் தலைவர்  முத்துக்குமார சாமி நிவாரண உதவிகளை வழங்கினார்.  இதில் வேலூர் கோட்டத்தின் சார்பாக தலை வர் பி.எஸ்.பாலாஜி, பொதுச் செயலாளர் எஸ். பழனிராஜ் மற்றும் கோட்ட சங்க நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கங்கா தேவி, முத்துக்குமார், கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்  திருவண்ணாமலை எல்ஐசி.,ஊழியர் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தது. இந்த நிகழ்ச்சியில், சிபிஎம் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப. செல்வன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ். ராமதாஸ், ஏ.லட்சுமணன், வட்டார செயலாளர் பி. கணபதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி. எம். பிரகாஷ், சிபிஎம் நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.