எல்ஐசி முகவர்கள் கமிஷன் தொகையை பிடித்தம் செய்யும் ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையை கைவிடக் கோரி புதுச்சேரி ஈசிஆர் சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, லிகாய் முகவர் சங்கத்தின் கிளைத் தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். சங்கத்தின் தமிழ் மாநில மகளிர் அமைப்பாளர் அன்பரசி ஜூலியட், கோட்ட பொருளாளர் பழனிச்சாமி, நிர்வாகி பொன்னுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.