தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்க ளிலும் 8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நடைபாதை கள் கண்ட றியப்பட்டு ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபயிற்சி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி துவக்கி வைத்து நடைபயிற்சியில் கலந்துகொண்டார். கடலூர் தேவனாம்பட்டி னம் சில்வர் கடற்கரையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழி லாளர் நலத்துறை அமைச்சர் சி.வே. கணேசன் ஆகி யோர் கலந்து கொண்டு நடை பயிற்சியை கொடிய சைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களோடு இணைந்து அமைச்சர்கள் நடந்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். சட்ட மன்ற உறுப்பினர் லட்சு மணன், மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் ஆட்சியர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்.