திருவள்ளூர், மார்ச் 24- திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவு தெரிவித்து திருத்தணியில் சிபிஎம் ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. அரக்கோணம் மக்கள வைத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட் பாளர் ஜெகத்ரட்சகனுக்கு, திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாக்குகளை சேகரிக்கும் விதமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் கூட்டம் சனிக்கிழமையன்று (மார்ச் 23), திருத்தணி பகத் சிங் நகரில் நடைபெற்றது. இதற்கு வட்டச் செயலா ளர் வி.அந்தோணி தலைமை தாங்கினார். திருத்தணி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினருமான சி.பெருமாள் சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் அப்துல் அகமத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.