கடலூர், ஜன.5- தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து தலைவர் அன்பழகன் தலை மையில் வெள்ளியன்று (ஜன.5) ஆய்வு மேற்கொண்டனர். கடலூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு சென்ற மதிப்பீட்டுக்கு குழுவினர் பள்ளி வளாகமும், கழிப்பறை, திடல் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். பிறகு, வகுப்பறைகளுக்கு சென்று மாண வர்களுடன் கலந்துரையாடி எதிர்கால நோக்கங்கள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, செம்மண்ட லத்தில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதி, பெண்ணை ஆற்றின் குறுக்கே விஸ்வநாதபுரத்தில் நடை பெற்று வரும் தடுப்பணை, தாழங்குடாவில் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பள்ளி வளாகம் தூய்மை இன்றியும், பாழடைந்த கட்டிடங்கள் இடிக்க படாமலும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையர், பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்தனர். அப்போது, பள்ளி வகுப்பறைகளை சீரமைத்து தூய்மைப்படுத்த வேண்டும், பாழடைந்த கட்டிடங்களை இடிக்க அறிவுறுத்தினர். இந்த ஆய்வு பணியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், சபா. ராஜேந்திரன், சிந்தனைச் செல்வன், மாநகராட்சி ஆணையர் சுந்தரி ராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.