இஸ்ரேலின் இன வெறியை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை அருகே திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார். சிபிஐ மாநில செயலாளர் சலீம், சிபிஎம் மாநில செயலாளர் ராஜாங்கம், சிபிஐ (எம்எல்)லிபரேசன் மாநில துணை செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் உரையாற்றினர். இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக இஸ்ரேல் ராணுவத்தின் அடாவடியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள இனப்படுகொலையை தடுத்து நிறுத்த கோரி இடதுசாரி கட்சிகள் சார்பாக கடலூரில் ஆவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டசெயலாளர் கோ.மாதவன், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் குளோப், சிபிஎம்எல் மாவட்ட செயலாளர் ராஜசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆறுமுகம், உதயகுமார், சுப்புராயன், ராஜேஷ், கண்ணன் (சிபிஎம்), பாஸ்கரன், சிவகுமார், நாகராஜன் (சிபிஐ), ரவி (பொதுநல அமைப்பு) உள்ளிட்ட ஏராளமனோர் பங்கேற்றனர்.
பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து விழுப்புரத்தில் திங்களன்று இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கலியமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, வி.ராதாகிருஷ்ணன், பி.குமார், எஸ்.கீதா, ஆர்.மூர்த்தி, ஜி.ராஜேந்திரன் (சிபிஎம்), ஆ.சௌரிராஜன், ஆர்.முருகன் (சிபிஐ) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இடதுசாரிகள் சார்பில் திங்களன்று (ஆக.7) காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.சங்கர், சிபிஐ மாவட்டச் செயலாளர் ப.கார்த்திக், சிபிஐ(எம்எல்) மாவட்ட செயலாளர் கு.முருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் நிர்வாகிகள் டி.ஸ்ரீதர், கே.நேரு, பி.ரமேஷ், ஆர்.மதுசூதனன், ஆர்.சௌந்தரி, சிபிஐ நிர்வாகிகள் பி.வி.சீனிவாசன், எ.மூர்த்தி, ஜெ.கமலநாதன், ஜெ. பூபாலன், சி.தங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.