வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வியாழனன்று இடதுசாரி கட்சிகள் சார்பில்திருவள்ளுர் மாவட்டத்தில் மறியலில் போராட்டத்தில் கைதானவர்களிடம் வசூலிக்கப்பட்ட 16 ஆயிரத்து 799 ரூபாயை சிபிஎம் மாநில மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதில் சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ப.சுந்தரராசன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், சிபிஎம் (எம்.எல்) மாவட்ட செயலாளர் எம்.அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.