புதுச்சேரி, ஜன.7- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி புதுச்சேரியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை அவமதிப்பு செய்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். தொடர்ந்து அரசியல் சாசனத்தை அவமதிப்பு செய்து வரும் பாஜக - வின் சுயரூபத்தை விளக்கி இப்போராட்டம் நடைபெற்றது. சுதேசி பஞ்சாலை எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஐ மாநில செயலாளர் சலீம், சிபிஎம் மாநில செயலாளர் ராமச்சந்திரன்,சிபிஐஎம்எல் மாநில நிர்வாகி புருஷோத்தமன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் விஸ்வநாதன், நாரா.கலைநாதன், சேதுசெல்வம்,தினேஷ் பொன்னையா, ராஜாங்கம், பெருமாள், தமிழ்ச்செல்வன் பிரபுராஜ், சீனுவாசன் கொளஞ்சியப்பன், சத்தியா, பாலசுப்பிர மணியன் உள்ளிட்ட திரளான இடதுசாரி கட்சி களை சேர்ந்த ஊழியர்கள், தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக அண்ணல் அம்பேத்கர் உரு வப்படத்தை ஏந்தியவாறு அமித்ஷாவை கண்டித்து கண்டனம் முழக்கங்களை இடதுசாரி கட்சிகளின் தொண்டர்கள் எழுப்பினார்கள்.