சென்னை, ஜன. 19 - இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலப் பொதுச் செயலா ளராகப் பல ஆண்டுகள் செயலாற்றி மறைந்த தோழர் அ. ரெங்கராஜனின் முதலாமாண்டு அஞ்சலிக் கூட்டம் வெள்ளியன்று (ஜன 19) நரேஷ் பால் மையத்தில் நடை பெற்றது. சம்மேளன மாநிலத் தலைவர் சுனில் குமார் தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தோழர் ரெங்க ராஜன் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், எளிமை, அர்ப்பணிப்பு, ஜனநாயக செயல்பாடு, உறுதியான போர்க்குணம் இவற்றின் சிறந்த முன்னுதாரணமாக ரெங்கராஜன் இருந்தார் என்று புகழஞ்சலி செலுத்தி னார். சம்மேளனத்தின் துணைத் தலைவர் என்.ராஜகோபால், பொதுச் செயலாளர் டி. ரவிக்குமார், செயலாளர் சர்வேசன் மற்றும் சி. பி. கிருஷ்ணன், எஸ் வி வேணுகோபாலன், ஏ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் அ.ரெங்க ராஜன் பணிகளை நினைவு கூர்ந்தனர். தோழர் அ.ரெங்க ராஜன் மகள் நித்யா, மருமகன் சத்யன் இருவரும் நிகழ்வில் பங்கேற்று இசைப் பாடல்கள் மூலம் அஞ்சலி செலுத்தினர்.