districts

img

வாணாபுரத்தில் நில உரிமை மீட்புப் போராட்டம்

கள்ளக்குறிச்சி, செப்.30 - கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், அத்தியூர் மற்றும் அரியலூர் கிராமத்தில் பஞ்சமி நிலத்தை மீட்கும் போராட்டம் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெற்றது.   அப்போது, வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பஞ்சமி நிலத்தை மீட்டு மனு கொடுத்த தலித் மக்கள் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் அனை வருக்கும் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பட்டா வழங்கியும் நிலத்தை ஒப்படைக்கவில்லை.இந்த நிலை யில், வாணாபுரம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தை சேர்ந்த பூம்பூம் மாட்டுக்காரர்கள் 30 குடும்பங்களுக்கு வழங்கிய வீட்டுமனைப் பட்டாவுக்கான இடத்தை உடனடியாக அளந்து அத்துக் காட்டி வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் வி.ராஜா தலைமையில் திங்களன்று (செப்.30) வாணாபுரம்-பகண்டை கூட்ரோடு பேருந்து நிலையம் அருகில் நில உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை, விதொச மாவட்டச் செய லாளர் பி.சுப்ரமணியன், தலைவர் அ.பா.பெரியசாமி, ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலாளர் வை.பழனி, சங்கராபுரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.சிவாஜி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி,மாவட்டத் தலைவர் மு.சிவக்குமார், எம். உத்திரகோட்டி, முன்னணியின் மாவட்ட நிர்வாகிகள் க.பாஸ்கர், எ.நடேசன், வீ.சந்திரா, பி.பழனி மற்றும் வாணாபுரம் கிராமம் பூம்பூம் மாட்டுக்காரர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.