சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.98 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் சென்னை பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சிக்கனான் ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகளையும் வேளச்சேரி மேம்பாலத்தை அழகுப்படுத்தும் பணியையும் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் செவ்வாயன்று தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் பி.கே சேகர்பாபு, தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலர் முருகானந்தம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் காகர்லா உஷா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.