சிதம்பரம், பிப் 28- சிதம்பரம் அருகே சி.முட்லூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் அதே பகுதியில் உள்ள அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் விடுதியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகிறார்கள். இந்நிலையில், உணவு தரமாக இல்லை. பூச்சி, புழுக்கள் நெளிகிறது. கழிவறை ஜன்னல்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. விடுதிக்கு சுற்றி சுற்றுச்சுவர் இல்லை. கண்காணிப்பு கேமராவும் கிடையாது. இதனால், காலை உணவை புறக்கணித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் விடுதி நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை துணை ஆட்சியர் சங்கர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் அனைத்தையும் சரி செய்து தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சௌமியா, துணைச் செயலாளர் சிவநந்தினி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.