கள்ளக்குறிச்சி, ஜூலை 11- மின்வேலியில் சிக்கி கூலித்தொழிலாளி உயி ரிழந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை கைது செய்யக்கோரி உளுந்தூர் பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆவேசப் போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே உள்ளது டைக்கல் கிராமம். இங்கு மக்கள் வசிக்கும் பகுதி அருகே உளுந்தூர்பேட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்டச் செயலா ளர் குமரகுரு அவரது சகோதரர் சாய்ராம் இரு வருக்கும் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த மே 1 ஆம் தேதி, எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்ற விவசாய தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த தாக கூறப்பட்டது. பிறகு, முன்னாள் அதிமுக எம்எல்ஏ குமரகுரு தனது நிலத்திற்கு மின்வேலி அமைத்தார் என்றும் அதில் சிக்கி தான் தொழிலாளி வேலாயுதம் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. அதை மூடி மறைப்பதற் காக தனது கூலி ஆட்கள் முருகவேல், இளவரசு, ராம் குமார், ராமசாமி மூலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கி வந்து போட்டதாகவும் கூறப்படு கிறது. எனவே இந்த மரணத் திற்கு நீதி கேட்டும், குமர குரு அவரது சகோதரர் சாய்ராம் ஆகிய இரு வரையும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கைது செய்ய வலியுறுத்தி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை (ஜூலை 11) போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் தலைமை யில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராள மான ஊர்வலமாக வந்து உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்ட னர். பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில செயற் குழு உறுப்பினர் எஸ்.கண்ணன்,மாவட்டச் செய லாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஆறு முகம், எம்.செந்தில் வி.சாமி நாதன், எம்.கே.பூவராகவன், ஒன்றிய செயலாளர்கள் டி.எஸ்.மோகன், ெஜ. ெஜய குமார், வி.ரகுராமன், எடைக் கல் கிளை செயலாளர் வே.பாலகிருஷ்ணன், உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் பி.சேகர், சேகர் உள்ளிட்டோர் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர்.