சிதம்பரம், நவ. 11- தமிழ்நாடு மாநில அளவிலான வூசூ தற்காப்புக்கலையின் தெரிவுப் போட்டியில் வெற்றி பெற்று தமிழக அணியின் சார்பாக காஷ்மீரில்நடைபெறும் தேசிய அளவி லான போட்டியில் சிதம்பரம் வீனஸ் பள்ளி யின் மாணவர் சோமேஷ்வர் (10ஆம் வகுப்பு ) கலந்து கொள்கிறார். இதேபோல் 9ஆம் வகுப்பு மாணவர் மோகேஷ் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான பேஸ்பால் போட்டி யில் வெற்றி பெற்று தமிழக அணிக்கு தேர்வாகி சட்டீஸ்கரில்நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார். மாவட்ட அளவிலான போட்டி களில் சதுரங்கத்தில் 11 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 4-ஆம் வகுப்பு மாணவி பிரகதா முதலிடம், 17 வயதிற்கு உட்பட்ட 9-ஆம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா முதலிடமும், 10-ஆம் வகுப்பு மாணவன் ஈஷ்வா மூன்றாமிடமும் பிடித்துள்ளார்கள். தடகளத்தில் 19 வயதிற்கு உட்பட பிரிவில் மாணவன் சிவகோகுல் குண்டு எறிதலில் முதலிடம் பிடித்தார். 100 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் மாணவி சுவேத்தாம்பரி 2-ம் இடம் பிடித்தார். 17வயதிற்குட்பட்ட பிரிவில் மாணவன் குருபிரசாந்த் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 2-ம் இடம் பிடித்தார். 14,17 வயதிற்குட்பட்ட பிரிவில் எறிபந்து, பூபந்து போன்ற போட்டிகளில் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் முதல்வர் நரேந்திரன், உடற்கல்வி இயக்குநர் பிர பாகர், உடற்கல்வி ஆசிரியர்கள் உமா, ரஞ்சித் ஆகியோரை பள்ளியின் தாளாளர் வீனஸ் குமார்,துணை தாளாளர் ரூபியால் ராணி ஆகியோர் வாழ்த்துகளை தெரி வித்து பாராட்டினர்.