districts

img

தங்கப்பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற 68ஆவது தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கிடையேயான கராத்தே போட்டியில் சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.எஸ்.நித்திலா தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு சிபிஎம்  தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் ஆடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். செயற்குழு உறுப்பினர் ச.லெனின், விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் ஏ.நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர். இவர், சிபிஎம் விருகம்பாக்கம் பகுதி கட்சி உறுப்பினர் மறைந்த காசியின் பேத்தியும், கராத்தே மாஸ்டர் சம்பத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.