பஞ்சாபில் நடைபெற்ற 68வது தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி ஏ.எஸ்.நித்திலா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு மற்றும் விருகம்பாக்கம் பகுதி நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.