கள்ளக்குறிச்சி மே 11. கள்ளக்குறிச்சி பாரதி கல்வி நிறுவனங்க ளில் பயின்ற மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றும் சாதனை படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி பாரதி கல்வி நிறுவனங்க ளான கள்ளக்குறிச்சி, தச்சூர், பங்காரம், சின்னசேலம், வடக்கனந்தல் பள்ளி கள் மாவட்ட அளவிலான அதிக மதிப் பெண்ணுடன் 100விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 10ம் வகுப்பு தேர்வில் மாணவி தர்ஷிணா 500க்கு 491 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ் பாடத்தில் 98, ஆங்கிலம் 98,கணிதம் 100, அறிவியல் 97,சமூக அறிவியல்98 என மொத்தம் 491 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பள்ளியில் நான்குமாணவிகள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். மாணவி கள் தர்ஷிணி, தர்ஷிதா கயல்விழி, மாண வன் முகிலன் ஆகியோர் 500க்கு 490 மதிப் பெண் எடுத்துள்ளனர். தர்ஷிணி என்ற மாணவி 489 மதிப்பெண்களுடன் 3வது இடத்தையும் விக்னேஷ்வரி, அரவிந்த், ஜனார்த்தனம், திருசெல்வம் ஆகிய நான்கு பேர் 500க்கு 488 மதிப்பெண்கள் எடுத்துள்ள னர். கணிதம் பாடத்தில் 22 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர்.பள்ளி செயலாளர் லட்சுமி கந்தசாமி கூறுகை யில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாண வர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி பெற்ற அனை வருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்1 சேர்க்கையில் கட்டணச் சலுகை வழங்கப் படும் என்றார். 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை தாளாளர் கந்த சாமி, ஆக்ஸாலிஸ் சிபிஎஸ்இ தாளாளர் பரத் குமார், செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர்கள் சுமதி. ராமசாமி, புவனேஸ்வரி,லதா, வேலு ஆகியோரும் பாராட்டினர்.