districts

img

விருதுபெற்ற எழுத்தாளர் பாவண்ணனுக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி, அக்.2-  இயல் விருது பெற்றஎழுத்தாளர் பாவண்ணனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா ஓசூரில் நடைபெற்றது.  ஓசூர் கிளைச் செயலாளர் சம்பு  ஒருங்கிணைப்பில் பெரியசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளரும் மொழி பெயர்ப்பாளமான கமலாலயன் துவக்க உரையாற்றினார். எழுத்தாளரும் தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியருமான சுபொ.அகத்தியலிங்கம் விட்டல் ராவுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். பெங்களூரு தமிழ் எழுத்தாளர் விட்டல் ராவ், சப்தகிரி பள்ளி தாளாளர் எழுத்தாளர் வணங்காமுடி, தமுஎகச மாவட்டச் செயலாளர் முனைவர் பால சுப்பிரமணியம்,எழுத்தாளர் ரமேஷ் கல்யாண், பாவண்ணனின், எழுத்து,புனைவு,எளிமை, கருத்துக் களை திணிக்காமல் வாசகரை அதில் ஆழ்ந்து போக செய்தல் உள்ளிட்ட அவர் எழுத்துக்களின் பரி மாணங்கள், அயராத உழைப்பு வாசிப்பு குறித்து பேசி பாராட்டினர். எழுத்தாளர் பாவண்ணன் ஏற்பு ரையாற்றினார். மாவட்ட தலைவர் பாலசுந்தரம் நன்றி கூறினார்.