வேலூர், அக். 20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் நகர குழுவின் 24வது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு என்.பாபு, ஏ.அஞ்சலி ஆகியோர் தலைமை தாங்கினர். குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து பேரணியை கட்சியின் மூத்த உறுப்பினர் என்.இ.கிருஷ்ணன் துவக்கி வைத்தார். கட்சிக் கொடியை மூத்த வழக்கறிஞர் சு.சம்பத்குமார் ஏற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். நகர செயலாளர் பி.காத்தவராயன் வேலை அறிக்கையையும், நிதிக்குழு கன்வீனர் வி.குபேந்திரன் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.ஏகலைவன் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். ஆர்.மகாதேவன் நன்றி கூறினார். தீர்மானங்கள் குடியாத்தம் நகராட்சியின் 36 வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும், பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டிடப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், கைத்தறி, பீடி, தீப்பெட்டி உள்ளிட்டவைகள் மீதான வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர குழுதேர்வு 9 பேர் கொண்ட குடியாத்தம் நகர குழுவின் செயலாளராக வி.குபேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.