கிருஷ்ணகிரி மூக்கண்டப்பள்ளி எம்ஜிஆர் நகர்பகுதியில் என்டிஆர் சாலை சந்திப்பில் இருந்த மின் கம்பத்தின் மீது வியாழனன்று டிப்பர் லாரி மோதியது. இதனால் மின்கம்பம் உடைந்தது தொங்கியது. அந்த நேரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம் தடுக்கப்பட்டது. லாரி அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது. பின்னர் மின்வாரியத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அலுவலர்கள் வந்து பார்வையிட்டனர்.