தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை மதிக்காமல் கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில் முகப்பேரில் உள்ள சென்னை மெட்ரோ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.