கொல்கத்தாவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து வெகுஜன இயக்கங்கள் சார்பாக காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே வியாழனன்று ஆர்.சௌந்தரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.