திருவண்ணாமலை, அக். 28 – கீழ்பென்னத்தூர் வட்டார அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும் என, கீழ்பென் னத்தூர் சிபிஎம் மாநாடு கோரிக்கை வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கீழ்பென்னத்தூர் ஒன்றிய 8 ஆவது மாநாடு வெள்ளியன்று (அக்.25) கீழ்பென்னத்தூரில் நடைபெற்றது. கே.சொக்க நாதன் கொடியை ஏற்றி வைத்தார். கே.ஜோதி வரவேற்றார், கே.பிரேம்குமார் அஞ்சலி தீர்மானம் வாசித்தார் கே.ரஜினி எழுமலை தலைமை தாங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.லட்சுமணன் தொடக்க உரையாற்றினார். செயலாளர் கே.வாசுகி வேலை அறிக் கையை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பிரகலநாதன் நிறைவுரையாற்றினார். ஒன்றியக்குழு 7 பேர் கொண்ட ஒன்றியக் குழுவின் செயலாளராக கே.வாசுகி தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் கீழ்பென்னத்தூரில், கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ஊரக வேலை உறுதி திட்டத்தில் சட்டக் கூலியுடன் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், வேட்ட வலம் நகரத்தில் இருவழிப் பாதையாக போக்குவரத்தை சீரமைத்து, பேருந்து நிறுத்தத்தில் கழிவறை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டன.