விழுப்புரம், ஜூன் 15-
விழுப்புரம் அருகே நண்பனை கொலை செய்தவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் ஜானகிபுரம் அங்காளம்மன் கோவில் அருகில் கடந்த மாதம் 5 ஆம் தேதி நத்தமேடு லட்சுமணனை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சரவணனை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் பழனிக்கு பரிந்துரைத்தனர். அவர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, சரவணனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.