districts

img

காதலர் தினத்தில் கவியரங்கம், பட்டிமன்றம்

கடலூர், பிப்.16-  பிப்ரவரி 14 உலக காதலர் தினத்தை முன்னிட்டு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம்,  இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடலூர்  கவியரங்கம், பட்டிமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் வினோத் குமார் தலைமை தாங்கினார். மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பூபதி வரவேற்றார்.  “இதயம் திற காதல் வரட்டும்” என்ற தலைப்பில் கவிஞர் வெற்றிச்செல்வி சண்முகம் தலைமையில் கவியரங்கம்  நடைபெற்றது. ஓவியர் ரமேஷ்,  கவி ஞர்கள் அன்பன் சிவா,  எதிலேந்தி விடுதலை, கவி மனோ சிவன்ராஜ்,  கலை வாணன் திருமால் ஆகி யோர் பங்கேற்றனர். “இன்றைய சமூகம் காதலை ஆதரிக்கிறதா? அடக்குகிறதா? “ என்ற தலைப்பில்  வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு தலைமையில் பட்டி மன்றம் நடைபெற்றது. ஆதரிக்கிறது என்ற தலைப்பில் குடியிருப்போர் சங்கத்தின் சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், மாண வர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சௌமியா ஆகியோர் பேசினர். அடக்குகிறது என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாணவ சங்க மாநில நிர்வாகி குமரவேல், ஆகி யோர் வாதங்களை முன்வைத்தனர்.  வாலிபர் சங்க மாநகர செயலாளர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.