சென்னை,நவ. 20- சென்னையில் நவ. 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற ‘காவேரி சர்வதேச இதயவியல் கருத்தரங்கு 2023’ நிகழ்வின் போது, ஆழ்வார் பேட்டையில் உள்ள தனது வளாகத்தில் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் நிறுவப்படு வதை காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. இதய அறிவியலில் விழிப்புணர்வை ஊக்குவிப்பது மற்றும் மேம்பட்ட, நவீன சிகிச்சைகளை வழங்குவது என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தை புகழ்பெற்ற இதயவியல் நிறுவனரான பத்மஶ்ரீ டாக்டர் கே.எம் செரியன் தொடங்கி வைத்தார். இதயவியல் சிகிச்சை துறையில் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான நவீன மேம்பாடு மற்றும் முன்னேற்றங்கள் குறித்த சமீபத்திய தகவல்களை அறிந்துகொள்ள காவேரி சர்வதேச இதயவியல் கருத்தரங்கு 2023 நடத்தப்பட்டது. இத்துறையில் புகழ்பெற்ற நிபுணர்களின் சிறப்புரைகளும், நவீன ஆராய்ச்சி குறித்த விளக்க காட்சிகளும் மற்றும் இதய பராமரிப்பில் சமீபத்திய மேம்பாடுகள் குறித்த விவாதங்களும், கலந்துரையாடல்களும் இந்த இருநாள் நிகழ்வில் இடம்பெற்றன. நாடெங்கிலுமிருந்து 250–க்கும் அதிகமான பிரதிநிதிகள் இக்கருத்தரங்கு நிகழ்வில் பங்கேற்றனர்.