திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகில் உள்ள கரையான் சாவடி, பொன்னியம்மன் நகரில் பாரதி குடிலை (அலுவலகம்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத் திங்களன்று (டிச 11), திறந்து வைத்தார். இதில் பூந்தமல்லி நகர செயலாளர் கி.பாரி, மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பி.சசிகலா, 5ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.