ராணிப்பேட்டை, அக்.5 – ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி, கீழாந்துரை கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப் போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சனிக்கிழமையன்று (அக்.5) நடைபெற்ற முகா மில் நெமிலி ஒன்றிய பெருந் தலைவர் தலைவர் பெ.வடி வேலு சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து திட்டப் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் மற்றும் நலத்திட்ட உதவி களை வழங்கினார். பொது மக்களிடம் இத்திட்டத்தில் எவ்வாறு பயன் பெற வேண்டும் என்பதை அவர் விளக்கினார். முகாமில் ஊராட்சி மன்றத் தலைவர் மின்னல் ஒளி அம்பேத்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் சங்கரி செல்லப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாபு, கலைஞர் தாசன், சுகாதார ஆய்வாளர்கள் பெருமாள், பூஞ்செழியன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.