districts

img

குப்பைகளுக்கு இடையே காஞ்சிபுரம் வாகன நிறுத்துமிடம்

காஞ்சிபுரம், டிச.22- காஞ்சிபுரம் மாவட்ட த்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய மற்றும் பட்டு சேலை எடுக்க தினம்தோறும் ஆயி ரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.  தற்போது சபரிமலை சீசன் என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சுற்றுலா வரும் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த ஒலிமுகமது பேட்டை, ஏகாம்பரநாதர் கோவில் அருகே தனி யாக இடம் உள்ளது. இது சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. வாகனங்களுக்கு கட்டணமாக 6 மணி நேரத்திற்கு பேருந்துக்கு ரூ.300, வேனுக்கு ரூ.200, காருக்கு ரூ.150, இருசக்கர வாகனத்துக்கு ரூ.20 என வசூலிக்கப்படுகிறது. வாகனங்களில் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வந்த உணவு களை சாப்பிட்டு விட்டு இலை உள்ளிட்ட குப்பை களை அங்கேயே போட்டு விடுகின்றனர். இதனால் அப்பகுதி குப்பை கூளமாக மாறி வருகிறது. இதனை முறையாக அகற்றுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. மேலும் போது மான கழிவறை வசதியும் இல்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்த னர். இதனால் அங்குள்ள காவலாளிகளிடம் பக்தர்கள்   அடிக்கடி வாக்குவாதம் செய்து வருகின்றனர். இது குறித்து பக்தர்கள் கூறும்போது, காஞ்சி புரத்திற்கு தினமும் 100 க்கும் மேற்பட்ட வாகனங்க ளில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். வாகனம் நிறுத்தும் கட்டணத்திற்கு ஏற்ப அங்கு உள் கட்ட மைப்பு வசதி இல்லை. 2 கழி வறைதான் உள்ளது. அது போதுமானதாக இல்லை. கூடுதல் கழிவறை வசதி செய்து தர வேண்டும்.பக்தர்களுக்கு ஏற்ப மேலும் போதிய வசதிகளை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்களும் சுற்றலா பயணிகளும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.