districts

img

அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம்

காஞ்சிபுரம், டிச.25- காஞ்சிபுரம் பழைய ரயில் நிலை யத்தில் குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே, ரயில்வே துறை அதி காரிகள் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சி புரம் பொன்னேரி கரையில் புதிய ரயில் நிலையம் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான பயணிகள் பேருந்து நிலையம் அருகில் இருப்பதால் சுமார் 60 ஆண்டுகால பழமை வாய்ந்த பழைய ரயில் நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இந்த ரயில் நிலை யத்தில் நாளுக்குநாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த ரயில் நிலையம் வழி யாக சென்னையிலிருந்து திரு மால்பூர் வரை பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர வாரத்தில் 4 நாட்கள் தென் மாவட்டங்களுக்கும், திருப்பதிக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படு கின்றன. மாவட்ட தலைநகரமான காஞ்சிபுரம் மற்றும் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளுக்கும், தனி யார் நிறுவனங்களுக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள், பெரும்பாலும் மின்சார ரயிலில்தான் பயணம் செய்கின்றனர். இதற்கு காரணம் தங்களின் பய ணத்திற்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பழைய ரயில் நிலையத்தை பயணிகள் பயன்படுத்துவதாக கூறு கின்றனர். இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தில் பெரும்பாலான அடிப்படை வசதிகள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது.  குடிநீர் வசதி இல்லை, இருக்கைகள் பராமரிப்பின்றி உடைந்த நிலையில் காணப்படுகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் ஆயிரக்  கணக்கான பொதுமக்கள் வந்து போகும் இந்த ரயில் நிலையத்தில் 2 கழிப்பறைகள் மட்டுமே இருக்கின்றன. அதுவும் பயன்பாட்டில் இல்லை என  ரயில் பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடம் மற்றும் முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.