காஞ்சிபுரம், ஆக 18 - காஞ்சிபுரம் மாநகராட்சி யில் பணியாற்றும் வெளிமு கமை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நாளில் ஊதி யம் வழங்குவதை காஞ்சி புரம் மாநகராட்சி உத்திர வாதப்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட முதல் மாநாடு வலியுறுத்தி யுள்ளது. அமைப்பின் முதல் மாநாடு ஞாயிறன்று (டிச.17) காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மாவட்டத் அமைப்பாளர் எஸ்.ஆனந்த் வேலையறிக்கையை முன்வைத்தார். முன்னதாக மாவட்டக்குழு உறுப்பினர் இ.சங்கர் வரவேற்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் சி.சங்கர் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் எஸ்.உதயகுமார் வேலை அறிக்கையை சமர்ப்பித் தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக் குமார், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.லெனின், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு (தவிச), மாவட்ட தலைவர் டி.ஸ்ரீதர் (சிஐடியு), விசிக மாவட்டச் செயலாளர் மதி.ஆதவன், அ.வே.முரளி (திக), கே.பிரபாகரன் (பகுஜன்), ஜி.பரமசிவம் (போதிதர்மா புத்த விகார்), என்.சாரங்கன் (தவிச), எல்.முருகேசன் (டி.என்.டி.எ) ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். மாநில பொதுச்செய லாளர் கே.சாமுவேல்ராஜ் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் டி.வி.ஆனந்த குமார் நன்றி கூறினார்.
தீர்மானங்கள் தமிழ்நாட்டில் சமீப காலமாக தீண்டாமையின் கொடூரம் பள்ளி குழந்தை கள் வரை நீட்சியடைந்துள் ளது. பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் இடையே அவ்வப்பொழுது தோன்று கின்ற நஞ்சை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகளி லும் நகராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் ஊராட்சி களிலும் காலமுறை ஊதியத்தில் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப் பட வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆங்காங்கே சில கிராமங்களில் இரட்டை குவளை, சுடுகாடு மறுப்பு, பாதை மறுப்பு போன்ற சில அருவருக்கத்தக்க நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. மாவட்ட நிர் வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தீண்டாமை போக்கு களை ஒழித்திட வேண்டும். சாதி ஆணவக் கொலை களுக்கு எதிராக தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். வன்கொடுமை சட்டத்தின் கீழ் விரைவாகவும் உறுதி யாகவும் நடவடிக்கை எடுப்பதை உத்திரவாதப் படுத்த வேண்டும். உள் ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் 36 பேர் கொண்ட மாவட்டக்குழுவிற்கு தலை வராக எஸ்.திருஞானம், செயலாளராக எஸ்.ஆனந்த், பொருளாளராக என்.நந்த கோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.