தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பேரவை கூட்டம் திங்களன்று காஞ்சிபுரம், தோழர் கே.எஸ்பி நினைவு இல்லத்தில் நடைபெற்றது. இந்த பேரவை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எல்.முருகேசன் தலைமையில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் சிறப்புரையாற்றினார். மாநில துணை செயலாளர் எம்.அழகேசன், மாவட்டத் தலைவர் கே.செல்வம், விவசாய சங்க நிர்வாகிகள் கே.நேரு, என்.சாரங்கன், எஸ்.ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.