ராணிப்பேட்டை, ஜன. 30- காஞ்சனகிரி கோவிலை இந்து அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா முகுந்தராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட காஞ்சனகிரி மலையில் 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலை முகுந்தராயபுரம் மற்றும் லாலாபேட்டையை சேர்ந்தவர்கள் நிர்வகித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, அறக்கட்டளை நிர்வாகிகள் முகுந்தராயபுரத்தை சேர்ந்தவர்களாக மட்டுமே உள்ளதாகவும் லாலாபேட்டையை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாய சங்க மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி கூறுகையில், “லாலா பேட்டை சிறு தீவு போல் உள்ளது. இந்த பஞ்சாயத்தை ராணிப்பேட்டை நகராட்சி யுடன் இணைக்க வேண்டும். காஞ்சனகிரி கோயிலை புனரமைத்ததில், வழிப் பாதை ஏற்படுத்தியதில், மின் விளக்கு அமைத்ததில் லாலாபேட்டை பகுதி மக்களின் பங்களிப்பு கூடுதலாகும்”என்றார். தற்போது வருமானம் கூடுதலாக வரும் சூழலில், அதை அபகரிக்கும் நோக்கில் முகுந்தராயபுரத்தைச் சேர்ந்தவர்கள் செயல்படுகின்றனர். முகுந்தராயபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் எ.கே.முருகன் தற்போது மலை அடிவாரத்தின் நுழைவு வாயிலில் கட்டணம் வசூலிக்கிறார். அதற்கான கணக்கை முறைப்படி தாக்கல் செய்யவில்லை என்றும் மணி குற்றம் சாட்டி னார். லாலாபேட்டை சேர்ந்தவர்கள் விவ சாய நிலங்கள் முகுந்தராயபுரம் பகுதியில் உள்ளதால், எங்கள் 4 ஏரிகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்தக் கூடாது. சுடுகாடுகளை பயன்படுத்தக் கூடாது, 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு வரக்கூடாது என கட்டுப் பாடுகள் விதித்துள்ளதாகவும் கூறப்படு கிறது. எனவே இந்த கோயிலை அற நிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி பிர முகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், லாலாபேட்டை பேருந்து நிலையம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு திங்களன்று (ஜன. 29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.