கள்ளக்குறிச்சி, மார்ச் 22- கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தி.மு.க வேட்பாளராக தே.மலையரசன்(49)அறிவிக்கப்பட்டுள்ளார். 1975 மே 30ஆம் தேதி பிறந்த இவர் எம்.காம், கூட்டுறவில் டிப்ளமோ படித்துள்ளார். இவருடைய சொந்த ஊர் தியாகதுருகத் திற்கு அருகே உள்ள சிறுநாகலூர் என்ற கிராமம், இவர் திருச்சி புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் பி.காம் பட்டப்படிப்பையும், பின்னர் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் எம்.காம் முதுகலை படிப்பை யும்,மேலும் கடலூர் எம்.ஜி.ஆர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு பட்டய படிப்பை யும் படித்துள்ளார். இவரின் தந்தை தேவ ராசு, தாய் தனக்கொடி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் சுருதி, சுவேதா,ஹேமா என்ற மூன்று மகள்களும் உள்ள னர். மலையரசன் தற்போது தியாகதுருகத்தில் உள்ள பேட்டைத் தெருவில் வசித்து வருகிறார். இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு தி.மு.க உறுப்பினராக இணைந்த இவர், 2006ம் ஆண்டில் கிளைச் செயலாளராகவும், 2007 ஆம் ஆண்டில் ஒன்றிய துணை செயலாளராகவும், 2011 ஆம் ஆண்டு திமுகவின் மாவட்ட பிரதிநிதியாகவும் கள்ளக்குறிச்சி தெற்கு பொறுப்புக் குழு உறுப்பின ராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தியாகதுருகம் ஒன்றியத் திற்கு உட்பட்ட சிறுநா கலூர் ஊராட்சி மன்ற தலை வராகவும், 2006 - 2011ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப் பின் தலைவராகவும், கட்டிடம் மற்றும் வரைபட குழு தொகுப்பின் கடலூர் மண்டல இயக்குநராகவும், தற்போது தியாகதுருகம் பேரூர் திமுக செயலாள ராகவும் களப்பணியாற்றி வருகிறார். இவரது வெற்றிக்காக இந்தியா கூட்டணியின் கட்சி கள் அனைத்தும் முழு வீச்சில் பணிகளை தொடங்கியுள்ளன.