கள்ளக்குறிச்சி, டிச.25- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே உள்ளது உ.நெமிலி ஊராட்சி மன்றம். அங்குள்ள உ. செல்லூர் கிராமத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக நான்காவது வார்டில் தெரு விளக்கு எரிய வில்லை. இருள் சூழ்ந்துள்ளது. இதனால், கிராம மக்கள் யாரும் வெளியில் வர முடியவில்லை. இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தீப் பந்தம் ஏந்தும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கிளைத் தலைவர் கே.சிவ கண்டன், செயலாளர் கே.குணா, எம். வீரமணி, இ.மணிகண்டன், டி.சத்தியமூர்த்தி, வி.பிரவீன்குமார், கே.சக்கரவர்த்தி, பொருளாளர் எம்.வீரன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.