கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஜி.அரியூர் ஆதிதிராவிடர் அரசினர் மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விவரம், விடுதி பராமரிப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்து விடுதியில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு அறிவுரை வழங்கினார்.