சென்னை, ஜூலை 8- புதிய தண்டனைச் சட்டத்தின் கீழ் மருத்துவர்களை மருத்துவ சிகிச்சை யில் ஏற்படும் தவறுகளுக்காக சிறையில் அடைக்கும் தண்டனைப் பிரிவுகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வடசென்னை மக்க ளவை உறுப்பினர் மரு. கலாநிதி வீராசாமி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஒன்றிய அரசு பாரதிய நியாய சன்ஹீதா என்ற புதிய தண்டனைச் சட்டத்தை (இந்தியன் பீனல் கோடுக்கு பதிலாக) 1.7.2024 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் 106 வது பிரிவின்படி எவரேனும் கவனக்குறைவாக அல்லது அவசர மாக செய்யும் செயல், ஒருவர் உயி ரிழப்பிற்கு காரணமானால், அவர்க ளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும், கவனக்குறைவான முறையில் மருத்துவ சிகிச்சை வழங்கும் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் செயலால், நோயாளிகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால், அந்த மருத்துவர்களுக்கு 2 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் தேசிய மருத்துவக் கமிஷன் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள மருத்துவர்களுக்கு இந்த சட்டத்தின்படி சிறை தண்டனை வழங்குவதை உறுதி செய்துள்ளது. ஏற்கெனவே வழக்கத்தில் இருந்த இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304.ஏ வின் படி மருத்துவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் மருத்துவர்கள், சிகிச்சையின் போது செய்யும் கவனக்குறைவான செயல்க ளுக்கு அதே தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல. மேலும் மக்களவையில் நீங்கள் பேசும்போது, மருத்துவர் சிகிச்சை வழங்கும் போது ஏற்படும் மரணம் என்பது கொலை என்று கூற முடியாது என்று கூறியதை உங்களுக்கு நினைவு கூறுகிறேன், அப்போது நீங்கள் வழங்கிய உறுதிக்கு மாறாக கூறப்பட்டுள்ளது நியாயமாகுமா? உலகெங்கும் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர் தின மாக அனுசரிக்கப்படுகிறது. 3ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் பாஜக அரசு இந்த சட்டத்தை இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அமல்படுத்தியுள்ளது. வடசென்னை மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ள நான் மருத்துவத்தை தொழிலாகக் கொண்டவன் என்ற நிலையில் இந்த தண்டனைச் சட்டத்தின் பிரிவிற்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தண்டனைச் சட்டப்பிரிவு மருத்துவ சேவை வழங்குவதில் உள்ள இடர்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் மருத்துவம் என்னும் தொழிலின் மகத்துவம் அறி யாமல், நோயாளிகளுக்கு ஓய்வின்றி தொண்டாற்றும் மருத்துவர்கள் அருஞ்செயல்கள் புரிந்து கொள்ளாமல் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவை வழங்கும் போது அறியாமல் ஏற்படும் தவறுகள் குற்றச் செயல்கள் என்று கூறுவது தவ றாகும் என்பதை புரிந்து கொண்டு இந்த சட்டப்பிரிவை மீண்டும் நீக்க பரிசீலிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் என அந்த கடிதத்தில் கலாநிதி வீராசாமி கூறியுள்ளார்.