வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொளத்தூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் செம்படை கலைக்குழுவினரின் “கைப்புள்ள மன்னரும் டம்மி பீஸ் மந்திரியும்” நாடகம் நடைபெற்றது. இதில் திமுக பகுதிச் செயலாளர் ஏ.நாகராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.