வேலூர், ஆக. 22 - வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தேவரிஷி குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு தரப்பினரால் (சாதி ஆதிக்க சக்திகள்) ஆகஸ்ட் 6 அன்று கோவில் சிலை மற்றும் வெளிப்புறச் சுவர் இடித்து தள்ளப்பட்டது. மேலும், கோயிலுக்குள் இருந்த சிலையை எடுத்துச் சென்றனர். இதையடுத்து, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சி யர், அறநிலையத்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஏழு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும், சாமி சிலையை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஒப்புக்கொண்டபடி, சாமியை ஒப்படைத்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் சந்தோஷ் தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு வினர் முன்னிலையில் காளியம்மன் கோவிலில் மீண்டும் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் இரு தரப்புக்கும் அதி காரிகள் அழைப்பு விடுத்த நிலையில் ஒரு தரப்பினர் (பட்டியல் சமூகத்தினர்) மட்டுமே கலந்து கொண்டனர். சாமியார் மீது வழக்கு பட்டியலின மக்களை வழிபாடு செய்வதை தடுக்கும் பூசாரி லோகநாதன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.