districts

img

கே.சங்கர்- வி.சித்ரா இல்லத் திறப்பு விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை கிளைச் செயலாளர், கே.சங்கர்-வி.சித்ரா ஆகியோரின் இல்லத் திறப்பு விழா ஞாயிறன்று (ஜூலை 7) ஓரிக்கை பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு கே.சங்கர் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் வி.சிவப்பிரகாசம் வரவேற்றார், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார் திறந்து வைத்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, பி.ரமேஷ் ஆர்.மதுசூதனன், மாநகரச் செயலாளர் டி.ஸ்ரீதர், காஞ்சி வட்டச் செயலாளர் எஸ்.பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.