districts

img

ஒருமையில் பேசிய தீட்சிதர்கள்: பத்திரிகையாளர்கள் புகார்

சிதம்பரம்,டிச.21- சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியை பத்திரிகையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.  அந்த மனுவின் கூறியிருப்பதாவது:- சிதம்பரம் நடராஜ கோவிலில் நடை பெறும் தேரோட்டத்தை பத்திரிகையாளர்கள் தெற்கு வீதியில் உள்ள சாரதராம் கட்டிடத்தின் மாடியிலிருந்து படம் பிடிக்க அனுமதிக்கப்பட்டது. மேலும், தரிசன விழாவின் போது  கிழக்கு கோபுர வாயில் அருகில் உள்ள கிணற்றுப் பகுதியில் இருந்து புகைப் படம் மற்றும் விடியோ எடுக்க கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்பப்பட்டது.   அதனடிப்படையில், குறிப்பிட்ட பகுதி யில் காவலர்களின் பாதுகாப்புடன் பத்திரிகையாளர்கள் படம் பிடித்துக்கொண்டி ருந்தனர். அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த தீட்சிதர்கள் சிலர், இங்கு புகைப் படம், வீடியோ எடுக்கக்கூடாது என்றும் பத்திரிகையார்கள் அனைவரையும் கலைந்து செல்லும்படி மாவட்ட ஆட்சியர் கூறிவிட்டார் என்று சொன்னார்கள். மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டும் தோனியில் தகராறு செய்தனர்.  இதனை தொடர்ந்து தீட்சிதர் ஒருவர் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடியிருக்கும் தரிசன விழாவில் ஒலி பெருக்கி மூலம் மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி பத்திரி கையாளர்களை வெளியேறும்படி தொடர்ந்து மூலம் கூறிகொண்டே இருந்தார். இந்த நாகரீகமற்ற செயலை கண்டித்தும்  ஒலி பெருக்கிமூலம் செய்தியாளர்கள் குறித்து ஒருமையில் பேசிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறியுள்ளனர்.