districts

img

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல்

கடலூர், ஜூலை 3- தமிழ்நாடு தொடக்கப் பள்ளி கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் சார்பாக கடலூர் முதன்மை கல்வி அலுவல கம் முன்பு மறியல் போராட் டம் நடைபெற்றது. தொடக்க கல்வித்துறை யில் 60 ஆண்டு காலமாக இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமை என்பதை மாற்றி அமைக்க அரசு  குழு அமைத்து அரசாணை  வெளியிட்டது. 243 அரசாணை நடை முறைப்படுத்துவதை கண்டித்தும், பெண் ஆசிரியர்களை பாதிக்கும் இந்த ஆணையை நீக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத் திற்கு மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அந்தோணி ஜோசப், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின நிர்வாகிகள் மணிவண்ணன், முருகன், தங்கத்தம்பி, வேத ரத்தி னம், குமரகுருநாதன், அறிவழகன், வெங்கடாசலம்  உள்ளிட்ட 50க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்ட னர்.