புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் கீழ் நேரடி நியமனத்திற்காக நடத்தப்பட்ட இளநிலை எழுத்தர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் 131 பேரும், மேல்நிலை எழுத்தர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் 255 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வானவர்களில் சிலர் அப்பணியில் சேராததால் “காத்திருப்போர் பட்டியலில்” இருந்த 20 நபர்களுக்கு இளநிலை எழுத்தர் மற்றும் மேல்நிலை எழுத்தர் பதவிக்கான பணி ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.இந்நிகழ்ச்சியின் போது, அமைச்சர் ஜெயக்குமார், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் செயலர் கேசவன், சார்புச் செயலாளர்கள் கண்ணன், ஜெய்சங்கர் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.