districts

சென்னை முக்கிய செய்திகள்

விமான துறையில்  வேலை வாய்ப்புகள்

 சென்னை,பிப்.7- விமான போக்குவரத்து சேவை பணிகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், விமான சேவையில் பிரபலமான குளோபல் ஃப்ளைட் ஹேண்ட்லிங் சர்வீஸ் நிறுவனம் சென்னையில் மிகப்பெரிய பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.  பஹ்ரைன் நாட்டின் கல்ஃப் ஏவியேஷன் அகாடமி உடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மைய மையத்திற்கு குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே, 8000 சதுர அடியில் குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.  கல்ஃப் ஏவியேஷன் அகாடமி உடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்திற்கு குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் என பெயரிடப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துக் கல்வியில், விரிவான பயிற்சித் திட்டங்களை வழங்க, அதிநவீன வகுப்பறைகள், அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி வசதிகள் மற்றும் அதிநவீன கற்றல் அனுபவத்தை வழங்க அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின், குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன்- விமானப் பள்ளி, கேபின் க்ரூப் பயிற்சி, பல்வேறு விமான நிலைய நிர்வாக திட்டங்களில் உள்ள படிப்புகள் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன.  புதிய பயிற்சி மையம் குறித்து பேசிய அந்த நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, “கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான விமானத்துறையில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் தேவை. இந்த பயிற்சி மையம் சென்னை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் இளைஞர்கள் இதனை பயன்படுத்தி திறமையை வளர்த்துக் கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்,” என்றார்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சென்னை, பிப். 7-  வாகனப் பெருக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றின் காரணமாக பெரிய நகரங்களில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன.இதை தடுக்கும் வகையில் சாலை பாது காப்பு வாரத்தை ஒட்டி இந்தியாவின் முன்னணி டெலிவரி தளமான ஸ்விக்கி, சென்னை பெரு மாநகராட்சி போக்கு வரத்து காவல்துறையுடன் இணைந்து சாலை பாதுகாப்பு மற்றும் போக்கு வரத்து விழிப்புணர்வு குறித்த 3 நாள் நிகழ்ச்சி சென்னையில் நடத்தியது. அண்ணா நகரில் கடந்த 5-ந் தேதி தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை முடிவடைந்தது. அண்ணாநகரில் ஸ்விக்கியில் டெலிவரி  பணியாளர்கள் பாது காப்பு பேரணியுடன் நிகழ்ச்சி தொடங்கி யது, இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் குமார், உதவி ஆணையர் சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சியில் 10 நாட்கள் புத்தக கண்காட்சி

கள்ளக்குறிச்சி, பிப்.7- கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏ.கே.டி. சிபிஎஸ்சி பள்ளி மைதானத்தில் மாவட்ட நூலக துறை சார்பில் பிப். 10 முதல்  19 வரை 10 நாட்களுக்கு புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர், புத்தக வாசிப்பை ஒரு இயக்கமாக கொண்டு செல்ல  வேண்டும். இதற்காக மாவட்டங்கள் தோறும்  சென்னை புத்தக கண்காட்சி போன்று தமிழ் நாடு முழுவதும் புத்தக கண்காட்சிகள் நடத்த வேண்டும் என்று  அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டில் 11 நாட்கள் மாபெரும் புத்தக திருவிழா நடைபெற்றது. இப்புத்தக கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள். மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.  அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு, ஏகேடி சிபிஎஸ்சி பள்ளி மைதானத்தில் புத்த கக் கண்காட்சி பிப்.10 முதல் 19  வரை 10 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை  நடைபெறுகிறது. புத்தக கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக பதிப்பக அரங்குகள் அமைக்கப்படவுள்ள இப்புத்தக கண்காட்சியில் சிந்திக்க தூண்டும் நட்சத்திர  பேச்சாளர்கள் சிந்தனை சொற்பொழிவு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தின மும் மாலையில் நடைபெறுகிறது . சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவது புத்தக வாசிப்பு ஆகும். இவற்றில் தமிழ் மொழியின் இலக்கிய மரபு களை கொண்டு சேர்ப்பதற்காக இது போன்ற  புத்தக கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.  எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள்,  சமூக ஆர்வலர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார்.

தனியார் பள்ளி வாகனம் மோதியதில் குழந்தை பலி

கடலூர்,பிப். 7- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் - வசந்தி  தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்த மகன் ரவிக்குமார் (3), காடாம்புலியூர் ஜெயந்தி வித்யாலயா தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் யுகேஜி வகுப்பு படித்து  வருகிறார். தினமும் பள்ளி வேனில் சென்று வருகிறார். வழக்கம் போல் புதன்கிழமை (பிப்.7) வேன் புறப்பட்டது.  அப்போது வேனுக்கு முன்பு நின்று கொண்டிருந்த ரவிக்குமார் தம்பியான ஒன்றரை வயது ரக்சன் மீது பள்ளி வேன் எறியதில் ரக்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காடாம்புலியூர் காவல் துறையினர் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி வேன் ஓட்டுநர் கைலாஷ் குமார் (35) மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சாதிச் சான்று வழங்காமல் அலைக்கழிப்பு: அவதிப்படும் பழங்குடி மாணவர்கள்

கிருஷ்ணகிரி,பிப்.7- பழங்குடி சாதிச் சான்று  வழங்காமல் அலுவலர்கள் தொடர்ந்து அலைகழித்து வருவதால் மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம்,  பர்கூர் வட்டம் ஜெகதேவி, ஒப்பதவாடி காமாட்சிபுரம், காளியம்மன் கோவில், கிருஷ்ணா நகர், காளிகோ யில் பகுதி இருளர் காலனி களில் 1000க்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்ற னர். இந்த பகுதி குழந்தை கள் அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்ற னர். முதல் தலைமுறையாக பள்ளிக்கு செல்லும் இந்த மாணவர்களுக்கு சாதிச் சான்று வழங்கப்பட வில்லை. இதனால், உதவித் தொகை கிடைக்கவில்லை. சாதிச் சான்று கேட்டு பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுக்கொள் ளவில்லை. பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்ற சில மாணவர்கள் மேல் வகுப்புக்கு செல்ல சாதி சான்றுக்காக 14 மாதங் களாக காத்திருக்கின்றனர். வருவாய்த்துறை அதிகாரி கள் அலைக்கழிப்பு மேற் படிப்பு தொடர முடியாமல் உள்ளனர். அரசு வழங்கும் ஓய்வூதி யம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை இந்த இருளர் இன மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ெஜகதேவி காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து  முறையிட்டனர். சிறப்பு  முகாம் நடத்தி அனை வருக்கும் சாதி சான்று வழங்க நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். அதேபோல், பர்கூர் வட்டத்தைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட இருளர், பழங்குடி மாணவர்கள் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் சரயு விடம் மீண் டும் கோரிக்கை மனு அளித்தனர். இதுவரைக்கும் சாதிச் சான்று கிடைக்காமல் மாணவர்கள் அலைகழிக்க படுகின்றனர்.