அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அராஜக முதல் வளைகுடாப் போருக்கு எதிராக 1991 ஜனவரி மாத இறுதியில் சென்னை அண்ணா சாலையில் அனைத்துத் தொழிற் சங்கங்கள், ஜனநாயக இயக்கங் களின் சார்பில் பிரமாண்டமான கண்டனப் பேரணி தொடங்க இருந்த நேரத்தில் வழங்கி இருந்த அனுமதியை ரத்து செய்து அறிவித்த காவல் துறை, அரசினர் கலைக்கல்லூரி அருகே திரண்டிருந்த ஆயிரக்கணக் கானோரை கலைந்து போக உத்தரவிட்டது. எந்த ஆத்திர மூட்டலும் இல்லாத நிலையிலும், ஆயுதப் பிரிவு காவலர்களை இறக்கி நீண்ட கழிகளால் தாக்க வும் தொடங்கியது. ஏராளமாகத் திரண்டிருந்த பெண்கள் மீதும் தாக்குதல் தொடங்கவும், நிலைமை இன்னும் மோசமானது. கண்மூடித்தனமாக தாக்குதல் ஒரு பக்கமும், அகப்பட்டவர்களை கைது செய்து வண்டிகளில் ஏற்றிச் செல்லவும், இடையே கண்ணீர்ப் புகை குண்டுகளை அப்பாவி மக்கள் மீது வீசவும் துணிந்தபோது, எதிர்த்து நின்று முழக்கமிட்டு, அந்தக் குண்டுகளில் ஒன்றைத் தனது கைக்குட்டையால் பிடித்து மீண்டும் எதிர்த் திசையில் வீசிய தீரர் தான் இயற்கை எய்திய தோழர் சி. அரி (74) எனும் ஹரிஹரன். காவல் துறையினர் அவரை அடித்து மிதித்து துவம்சம் செய்த நிலையில் மருத்துவமனை யில் எலும்பு முறிவிற்காக சேர்க்கப் பட்டிருந்த நிலையிலும் வலியைச் சொல்லிப் புலம்பாமல் தனது பங்கேற்பின் பெருமிதத்தில் புன்னகை பூத்தவர் அரி. காவல் துறை தாக்குதல் அவருக்குப் புதி தும் அல்ல. இளவயதில் விமானப் படையில் சேர்ந்து அங்கு பணி முடித்து, இந்தியன் வங்கியில் பணி நியமனம் பெற்றவரான அரி, எண்பதுகளில் வாலிபர் அரங்கில் முன்னணியில் நின்று செயல்பட்ட வர். கள்ளச் சாராயக் கும்பலின் விற்பனை மையங்களில் சிக்குண்ட இளைஞர்களை அழைத்துப் பேசி அறிவூட்டித் தெளிவுபடுத்தி மீட்டெடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்களாக வளர்த்தெடுத்தவர். அதனால் வெகுண்டெழுந்த ரவுடி கும்பலையும், காவல் துறை யினரையும் ஒரு சேரத் துணிந்து நின்று எதிர்கொண்ட அஞ்சா நெஞ்சர். எழும்பூர் பகுதிக் குழுவின் முதல் செயலாளராக மார்க்சிய கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்ட அரி, வட சென்னை மாவட்டக் குழு உறுப்பினராகச் செம்மாந்த பணிகள் ஆற்றியவர். ரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கம், மாட்டு வண்டி ஓட்டுநர்களைத் திரட்டி அவர்களுக் கான சங்கம் என்று உழைப்பாளி மக்களுக்கான பல்வேறு பணி களையும், களப் போராட்டங்களை யும் முன்னின்று நடத்தியவர்.
இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்க முன்னணி செயல்பாட்டாளராகத் திகழ்ந்த அரி, இளம் தோழர்களைத் தொழிற் சங்கப் பணிகளில் ஈர்த்து ஈடு படுத்துவதில் முனைப்பாக இருந்த வர். ஊழியர் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவும், நிர்வாகத் தின் தவறான அணுகுமுறை களைத் தட்டிக் கேட்கவும், அடக்கு முறைக்கு எதிராகத் துணிந்து போராடவும் மட்டுமின்றி,பணி கலாச்சாரம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஊழியர்களி டம் வலியுறுத்திக் கூறவும் செய்த வர். புதன்கிழமை (செப் 25) அன்று காலை உடல்நலக் குறைவு காரண மாக காலமான அரியின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வே.ஆறுமுகம், எஸ்.கே.முருகேஷ், சர்வேசன், எழும்பூர் பகுதிக்குழு செயலாளர் கே.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.வி.வேணு கோபாலன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். அரி அவர்களுடைய இணை யர் காஞ்சனா மாதர் சங்கப் பொறுப்புகளில் இயங்கியவர். மகன்கள் பிரவீன், சுந்தர் மற்றும் மகள் ஷோபனா உள்ளனர். மறைந்த அரி அவர்களது இறுதி ஊர்வலம் எழும்பூர் சூரம்மாள் தெரு இல்லத்தில் இருந்து வியா ழன் அன்று (செப் 26) காலை 10 மணிக்குப் புறப்படும். காலை 11 மணியளவில் ஓட்டேரி மயானத்தில் இறுதி நிகழ்ச்சிகளை ஒட்டி இரங் கல் கூட்டம் நடைபெறும் என்று சிபிஎம் எழும்பூர் பகுதித் குழு தெரிவித்துள்ளது.